சிவய.திருக்கூட்டம் sivaya.org Please set your language preference by clicking below languages link |
This page in
Tamil
Hindi/Sanskrit
Telugu
Malayalam
Bengali
Kannada
English
ITRANS
Gujarathi
Oriya
Singala
Tibetian
Thai
Japanese
Urdu
Cyrillic/Russian
பாண்டியன்கொண்டாடப் பட்டர்பிரான்வந்தானென்று ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள் நம்மாழ்வார்தனியன் குரு பரம்பைரதனியன் உடயவர்அருளிச்செய்தது உய்யக்கொண்டார் அருளிச்செய்தது வேதாந்த தேசிகன் தனியன் ஆழ்வார்கள் உடையவர்தனியன் அல்லிநாள் தாமரைமேலாரணங்கினின்துணைவி | (அழகிய மணவாளன் அருளிச்செய்தது) நாதமுனிகள் அருளிச் செய்தது பாண்டிய பட்டர் அருளிச் செய்தவை திருக்கண்ணமங்கையாண்டான்அருளியது சொல்லின் தொகைகொண் டுனதடிப் போதுக்குத் தொண்டுசெய்யும், நயந்தரு பேரின்ப மெல்லாம் பழுதென்று நண்ணினர்பால் வேதப்பிரான்பட்டர் அருளிச்செய்தவை பட்டர்அருளிச்செய்தவை அனந்தாழ்வான்அருளிச்செய்தது சொட்டைநம்பிகள்அருளிச்செய்தது ஈச்வரமுனிகள்அருளிச்செய்தது
(1.0)
தனியன்கள் (1.1)
Pages:
1
2
3
Next
ஈண்டியசங்கமெடுத்தூத - வேண்டிய
வேதங்களோதி விரைந்துகிழியறுத்தான்
பாதங்கள்யாமுடையபற்று.
[1.3]
பராசர பட்டர் அருளிச்செய்தது
நீளா துங்க ஸ்தந கிரிதடீ ஸுப்தம் உத்போத்ய க்ருக்ஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸத ஸரஸ் ஸித்தமத்யா பயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்துபூய:
[474.1]
(ஆளவந்தார் அருளிச்செய்தது)
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் யதேவ நியேமந மதந்வயாநாம்
ஆத்யஸ்ய ந: குலபேதர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா
[0.5]
Go to Top
(கூரத்தாழ்வான் அருளிச்செய்தது)
லஷ்மீ நாத ஸமாரம்பாம் நாதயாமுந மத்யமாம்
அஸ்மதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்
[0.3]
Go to Top
இன்னமுதமூட்டுகேன்இங்கேவாபைங்கிளியே!
தென்னரங்கம்பாடவல்லசீர்ப்பெருமாள் |பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள்சேரலர்கோன் |எங்கள்
குலசேகரனென்றேகூறு
[647.1]
அன்னவயற்புதுவைஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு
சூடிக்கொடுத்தசுடர்க்கொடியே! தொல்பாவை
பாடிஅருளவல்லபல்வளையாய்! நாடி நீ
வேங்கடவற்குகென்னைவிதியென்றவிம்மாற்றம்
நாம்கடவாவண்ணமேநல்கு.
[474.2]
(ப்ரஹ்மதந்த்ர ஸ்வதந்த்ர ஜீயர் அருளிச்செய்தது)
வடகலை ஸம்ப்ரதாயம்
ராமாநுஜ தயாபாத்ரம் ஜ்ஞான வைராக்ய பூஷனம்
ஸ்ரீமத் வேங்கடநாதார்யம் வந்தே வேதாந்த தேசிகம்
[0.1]
Go to Top
(ஸ்ரீபராசர பட்டர் அருளிச்செய்தது)
பூதம் ஸரஸ்ச மஹதாஹ்வய பட்ட நாத
ஸ்ரீபக்திஸார குலேசகர யோகிவாஹாந்
பக்தாங்க்ரிரேணு பரகால யதீந்த்ரமிஸ்ராந்
ஸ்ரீமத் பராங்குஸநிம் ப்ரணேதாஸ்மி நித்யம்
[0.4]
Go to Top
மல்லிநாடாண்டமடமயில் - மெல்லியலாள்
ஆயர்குலவேந்தனாகத்தாள் | தென்புதுவை
வேயர்பயந்த விளக்கு.
[504.2]
Go to Top
தென்கலை ஸம்ப்ரதாயம்
ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்யஜாமாதரம் முநிம்
[0.2]
Go to Top
குருமுக மனதீத்ய ப்ராக வேதானசேஷான்
நரபதிபரிக்லுப்தம் சூல்கமாதாதுகாமக
ச்வசுரமமரவந்த்யம் ரங்கனாதச்ய சாக்ஷாத்
த்விஜகுலதிலகம் தம் விஷ்ணுசித்தம் நமாமி
[1.1]
மின்னார்தடமதிள்சூழ் வில்லிபுத்தூரென்று ஒருகால்
சொன்னார்கழற்கமலம்சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தானென்றுரைத்தோம், கீழ்மையினிற்சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே. வந்து
[1.2]
கோலச்சுரிசங்கைமாயன்செவ்வாயின்குணம்வினவும்
சீலத்தனள் | தென்திருமல்லிநாடி | செழுங்குழல்மேல்
மாலத்தொடை தென்னரங்கருக்கீயும்மதிப்புடைய
சோலைக்கிளி | அவள்தூயநற்பாதம்துணைநமக்கே.
[504.1]
Go to Top
நல்லன்பர் ஏத்தமுன் நாமமெல் லாமென்றன் நாவினுள்ளே
அல்லும் பகலும் அமரும் படிநல்கு அறுசமயம்
வெல்லும் பரம, இராமா னுச! இதென் விண்ணப்பமே.
[3777.3]
சயந்தரு கீர்த்தி இராமா னுசமுனி தாளிணைமேல்,
உயர்ந்த குணத்துத் திருவரங் கத்தமுது, ஓங்கும்அன்பால்
இயம்பும், கலித்துறை அந்தாதி ஓத இசைநெஞ்சமே!
[3777.2]
முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொன்னங் கழற்கமலப் போதிரண்டும், - என்னுடைய
சென்னிக் கணியாகச் சேர்த்தினேன், தென்புலத்தார்க்
கென்னுக் கடவுடையேன் யான்.
[3777.1]
வான்திகழும்சோலைமதிளரங்கர் வண்புகழ்மேல்
ஆன்றதமிழ்மறைகளாயிரமும் - ஈன்ற
முதல்தாய்சடகோபன் மொய்ம்பால்வளர்த்த
இதத்தாய்இராமுனுசன்.
[2675.5]
ஏய்ந்தபெருங்கீர்த்தியிராமானுசமுனிதன்
வாய்ந்தமலர்ப்பாதம்வணங்குகின்றேன் - ஆய்ந்தபெருஞ்ச்
சீரார்சடகோபன்செந்தமிழ்வேதம்தரிக்கும்
பேராதவுள்ளம்பெற.
[2675.4]
மனத்தாலும்வாயாலும் வண்குருகூர்பேணும்
இனத்தாரையல்லாதிறைஞ்சேன் - தனத்தாலும்
ஏதுங்குறைவிலேன் எந்தைசடகோபன்
பாதங்கள்யாமுடையபற்று.
[2675.3]
திருவழுதிநாடென்றும் தென்குருகூரென்றும்
மருவினியவண்பொருநலென்றும் - அருமறைகள்
அந்தாதிசெய்தானடியிணையே எப்பொழுதும்
சிந்தியாய்நெஞ்சே! தெளிந்து.
[2675.2]
Other Prabandhams:
திருப்பல்லாண்டு
திருப்பாவை
பெரியாழ்வார் திருமொழி
நாச்சியார் திருமொழி
திருவாய் மொழி
பெருமாள் திருமொழி
திருச்சந்த விருத்தம்
திருமாலை
திருப்பள்ளி எழுச்சி
அமலன் ஆதிபிரான்
கண்ணி நுண் சிறுத்தாம்பு
பெரிய திருமொழி
திருக்குறுந் தாண்டகம்
திரு நெடுந்தாண்டகம்
முதல் திருவந்தாதி
இரண்டாம் திருவந்தாதி
மூன்றாம் திருவந்தாதி
நான்முகன் திருவந்தாதி
திருவிருத்தம்
திருவாசிரியம்
பெரிய திருவந்தாதி
நம்மாழ்வார்
திரு எழு கூற்றிருக்கை
சிறிய திருமடல்
பெரிய திருமடல்
இராமானுச நூற்றந்தாதி
திருவாய்மொழி
கண்ணிநுண்சிறுத்தாம்பு
அமலனாதிபிரான்
திருச்சந்தவிருத்தம்
This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
send corrections and suggestions to admin @ sivaya.org
divya prabandham chapter